சாயல்குடி, பிப். 21: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க கோரி கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை மதுரை விமானநிலையத்திற்கு வைக்க வேண்டும், முக்குலத்தோருக்கு டிஎன்டி சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவர் அமைப்பினர் மதுரையில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடலாடி அரசு அரசு கலை கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறகணித்து, கல்லூரியை விட்டு வெளியேறி கடலாடி தேவர்சிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து கலைந்து சென்றனர்.