×

பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப் 21: ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழ் தேசிய கட்சியின் சார்பாக பெரிய கண்மாயை தூர்வார கோரியும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். தொடர்ந்து தலைவர் தமிழ்நேசன், பொதுச்செயலாளர் அப்பாக்கண்ணு, முல்லைநாதன் ஹரி முருகன், சந்திரபோஸ் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனே அகற்ற வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

உப்பூர் அனல்மின் நிலையத்திற்காக விவசாயிகளிடம் பெற்றுள்ள நிலத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும். ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சியில் வெளியக்கோட்டை கிராமத்தில் புதிய நியாயவிலை கடை அமைத்து அடிப்படை வசதியை பூர்த்தி செய்ய வேண்டும். சனவேலி கிராமத்தில் கடை வீதியில் சந்தைக்கடை அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய நிர்வாகிகள் முருகேசன், காளீஸ்வரன், மலைக்கண்ணு, சேகர் மற்றும் பெண்கள் உள்ளபட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மோகன் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,Tamil National Party ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்