மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

மதுரை, பிப். 21: வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என மாற்றுத்திறனாளிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாக ஒட்டு போடும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்காளர் அட்டையுடன் தேர்தல் அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பது உறுதி செய்ய வேண்டும். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் முனிச்சாலலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் 3லும், மதுரை மேற்கு,

தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மதுரை மகப்பூபாளையத்தில் உள்ள மண்டலம் எண் 1லும், மதுரை வடக்கு தொகுதியில் உள்ளவர்கள் புதூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலக எண்2லும், மதுரை மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ரயில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள மாநகராட்சி மண்டல எண்4லும், மதுரை புறநகர் பகுதியில் உள்ள வாக்காளர்கள் அவர்களுக்குரிய தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் சரி பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: