மாலையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

மதுரை, பிப். 21: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து கட்சியினருக்கு விளக்குவதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் பிப்ரவரி 21 (இன்று) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதேபோல் ஊராட்சி ஒன்றியம், நகர், பேரூர் அளவிலும் கூட்டங்கள் நடக்கின்றன.  இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன், ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: