×

பஸ்கள் மீது கல்வீச்சு

உசிலம்பட்டி, பிப்.21: உசிலம்பட்டி பேரையூர் சாலை வலையபட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசினர். அதில் எம்.கல்லுப்பட்டியிலிருந்து உசிலம்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு டவுண் பஸ், உசிலம்பட்டியிலிருந்து டி.கல்லுப்பட்டிக்கு சென்ற அரசு டவுண் பஸ்களின் கண்ணாடி உடைந்தது. இதில் டி.கல்லுப்பட்டி சென்ற அரசு டவுண் பஸ் டிரைவர் கல்லூத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் காயமடைந்தார். உசிலம்பட்டி டிஎஸ்பி. ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...