மதுரை, ஜன.21: நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி நாளாகும்.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி வெளியிட்ட அறிக்கை; விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.3ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.