இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை, பிப். 21:மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் இன்று (21ம் தேதி) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை தெற்கு மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ராஜாகாந்தி (பொ) தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, ஊரகம் அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து மின் நுகர்ேவாரும் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ  தெரிவித்து பயனடையலாம்.

Related Stories: