பழநி மாசித்திருவிழாவில் பூச்சொரிதல் ரதம்

பழநி, பிப். 21: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நடந்த பூச்சொரிதல் ரத ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் சார்பில் அலங்கார ரத உர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது. கண்பத் ஹோட்டல்ஸ் தலைவர் ஹரிஹரமுத்து முன்னிலை வகித்தார். பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் துவக்கி வைத்தார். சுமார் 3 டன் பூக்களை கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து கிளம்பி சன்னதிவீதி, பாளையம், பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், செயலாளர் செல்வராஜ், பழநி வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் அக்கீம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: