வத்தலக்குண்டுவில் ஈஷா சிவன் ரதத்திற்கு வரவேற்பு

வத்தலக்குண்டு, பிப். 21:  மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மைய சிவன் ரதம் மாநிலம் முழுவதும் வலம் வருகிறது. நேற்று முன்தினம்  வத்தலக்குண்டு வந்த இந்த ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சமூகஆர்வலர்கள் தங்கப்பாண்டி, கண்மணிராஜா, லிங்கப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர். ரதத்தில் வந்த குருக்கள் கணேசமூர்த்தி, பட்டுத்துரை சிவனுக்கு பல்வேறு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர். பின்னர் சிவன் ரதம் நிலக்கோட்டை, வாடிப்பட்டி வழியாக மதுரை நோக்கி சென்றது.

Related Stories: