பழநி, பிப். 21: பழநியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறையின் சித்தா பிரிவின் சார்பில் நோய் தடுப்பு முகாம் நடந்து வருகிறது. அந்தவகையில் தாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14ம் அணியில் பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நோய் பரவும் விதம், அதனை தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.