குஜிலியம்பாறை, பிப். 21: குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பங்களிப்போடு அரசு விழாவாக நடத்தாமல் அதிமுக விழாவாக எம்எல்ஏ நடத்தி விட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பொதுமக்களுடன் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியை அதிமுகவினரை வைத்து கட்சி விழாவாக பரமசிவம் எம்எல்ஏ நடத்திவிட்டார் என குஜிலியம்பாறை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 2017ம் ஆண்டு டிச.31ல் முதல்வர் பழனிசாமி குஜிலியம்பாறை தனி தாலுகா அறிவிப்பு செய்தார். அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அரசாணை வெளியிடாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதம், 4 நாட்கள் நடைபயணம், தெருமுனை பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.