கொடைக்கானல், பிப். 21: வில்பட்டி பஞ்சாயத்தில் விதிமீறி கட்டப்பட்ட 405 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறிய 1415 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கான பணிகளை நகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி வில்பட்டி கிராம பஞ்சாயத்து பகுதியில் அனுமதியற்ற, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் கூறுகையில், ‘‘ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அனுமதியற்ற, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை துவங்கியுள்ளோம்.