சங்கராபுரத்தில் நீதிமன்றம் கட்டும் இடத்தை முதன்மை நீதிபதி ஆய்வு

சங்கராபுரம், பிப். 21: சங்கராபுரம் முதல்பாலமேட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் புதிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சங்கராபுரம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவியல் நீதிபதி சண்முகம், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் வைத்தியநாதன், சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன், வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ்குமார், அரசு வழக்கறிஞர் தாமரைச்செல்வன், வழக்கறிஞர்கள் முகமதுபாஷா, ராஜ்குமார், விஜயகுமார், சத்தியமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் சத்தியநாராயணன், வட்ட சார் ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் தேவதாஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: