உளுந்தூர்பேட்டை, பிப். 21: உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமங்கலம் கிராமத்தில் வேகமாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, கூழாங்கல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து கூழாங்கல் கடத்திய இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாசில்தார் இளங்கோவன் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கூழாங்கல் கடத்தலில் ஈடுபட்ட சேமக்கோட்டை சிவராமன், கல்லமேடு பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.