காருடன் மதுபாட்டில் பறிமுதல்

நெய்வேலி, பிப். 21:  நெய்வேலி மந்தாரக்குப்பம் வளையமாதேவி சாலையில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனா வாகன சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தியபோது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் காரை சோதனையிட்டபோது புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 குவார்ட்டர் பாட்டில்கள், 4 கேன்களில் 40 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து, போலீசார் காருடன் மதுபாட்டில்கள், சாராயத்தை கைப்பற்றி காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: