பாம்பு கடித்து பெண் சாவு

திருவெண்ணெய்நல்லூர், பிப். 21: திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சுதா (36). இவர் கடந்த 18ம் தேதி அதே பகுதியில் ராகவன் கால்வாயில் கீரை பறிக்க சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அருகில் உள்ள தி.எடையார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் எஸ்ஐ அய்யனார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: