திண்டிவனம், பிப். 21: திண்டிவனம்- மயிலம் ரோட்டில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்
படையில் இந்தக்கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் இப்பகுதியில் மதுக்கடை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்ததும் அந்த பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே இங்கு மதுக்கடை இருந்தபோது தினமும் இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை தெருவில் வீசி விட்டுச்சென்றனர்.