தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி

சேத்தியாத்தோப்பு, பிப். 21:    சேத்தியாத்தோப்பு அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வளையமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), தமிழரசி (55), ரவி (44) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனமும் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது.

 விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ரவி இறந்தார். இதுகுறித்து ரவியின் மனைவி சுமதி சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: