சேத்தியாத்தோப்பு, பிப். 21: சேத்தியாத்தோப்பு அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வளையமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), தமிழரசி (55), ரவி (44) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனமும் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது.