புயலின்போது உடைந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

வானூர், பிப். 21:  கொஞ்சுமங்கலம் கிராமத்தில் மின் கம்பம் சேதம் அடைந்துள்ளதால், மின் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வானூர் தாலுகா கொஞ்சுமங்கலம் கிராமத்தில் மின்மாற்றி எண் 1ல் கடந்த கஜா புயலின்போது, 3 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்துவிட்டது. இதனால் அந்த மின்மாற்றியிலிருந்து விவசாய மின்மோட்டார்களுக்கு மின் சப்ளை செல்வது தடைபட்டது. தொடர்ந்து விவசாயிகள் பலமுறை மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டு வந்தும், இதுவரையில் அந்த மின்கம்பத்தை சரிசெய்து மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் விவசாயிகள் பயிர்செய்ய முடியாமல் நிலத்தை தரிசாகவே விட்டுவிட்டனர். இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய மின்பங்களை அமைத்து விவசாய மோட்டாருக்கு இணைப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: