தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம்

விக்கிரவாண்டி, பிப். 21: விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராம பகுதியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுப்பது தொடர்பாக ஒரே சமூகத்தை சார்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒரே சமூகத்தை சார்ந்த உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து பேசி இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதில் துணை தாசில்தார் அரிதாஸ், மற்றும் இரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் .

Related Stories: