விழுப்புரம், பிப். 21: விழுப்புரம் மாவட்டத்தில் 25 தாசில்தார்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திண்டிவனம் சமூக பாதுகாப்புத்திட்டம் நளினி, செஞ்சி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஆதிபகவன் செஞ்சி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் கமலம், அங்கேயே சமூக பாதுகாப்புத்திட்டத்திற்கும், காதர் கள்ளக்குறிச்சி தென்னக ரயில்வே தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலம் விஜயபிரபாகரன், வனநிர்ணய அலுவலராகவும், அங்கிருந்த காதர்அலி ஆதிதிராவிடர் நலன் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். விழுப்புரம் தாசில்தார் சையத்மெஹமூத் கேபிள் டிவி பிரிவுக்கும், செஞ்சி ரங்கநாதன் திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், திண்டிவனம் பிரபு, விழுப்புரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.