பைக்கில் மணல் கடத்தல்: 4 பேர் கைது

திருக்கோவிலூர், பிப். 21:திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம் பகுதியில் ஒரு கும்பல் பைக்கில் மணல் கடத்துவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, அங்கு 5 பேர் கொண்ட கும்பல் தனித்தனி பைக்கில் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டு ஒரு வாலிபர், தனது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். மற்ற 4 பேரை போலீசார் பிடித்து கைது செய்து, அவர்களிடமிருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வீரப்பாண்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார்(24), ஏழுமலை மகன் அன்பு(30), காசிவேல் மகன் தங்கமணி(25), அய்யனார் மகன் சரவணன்(23). தப்பி ஓடிய நபர் சங்கர் மகன் மணிமாறன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, மணிமாறனை தவிர மற்ற

4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: