விக்கிரவாண்டி, பிப். 21: விழுப்புரம் அருகே பனங்குப்பத்தை சேர்ந்தவர் திருமலை மகன் இருசன்(40), விவசாயி. நேற்று இவர் அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்தவர்கள் அவரை ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் இருசனுக்கு எக்ஸ்ரே எடுத்து ரிசல்ட் வருவதற்காக டாக்டர்கள் காத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருசனுடன் வந்த அவரது மகன் அன்பு (20) அவசர சிகிச்சை பிரிவில் இருந்த செவிலியர்களிடம் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தாமதப்படுத்துவதாக கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.