×

திதி கொடுக்க சென்ற முதியவர் ஆற்றில் மூழ்கி பலி

வில்லியனூர், பிப். 21: வில்லியனூர் அடுத்த கொத்தபுரிநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (71). இவரது மனைவி வள்ளி. 3 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஜெயபாலன், அவரது மனைவி ஆகியோர் மகன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்க்கு திதி கொடுப்பதற்காக சங்கராபரணி ஆற்றுக்கு வந்துள்ளார். திதி கொடுத்து விட்டு ஆற்றில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : river ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...