பாகூர், பிப். 21: பாகூர் அருகே சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர், இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள், சாக்கு மூட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.