இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபர் சிக்கினார்

பாகூர், பிப். 21: பாகூர் அருகே சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர், இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள், சாக்கு மூட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில், சோரியாங்குப்பம் நாகத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த துரை என்ற செல்வதுரை (25) என்பவர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து செல்வதுரையை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: