×

காங். தேர்தல் குழுக்களுடன் சஞ்சய் தத் ஆலோசனை

புதுச்சேரி, பிப். 21:  புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார குழு, விளம்பர குழு, மீடியா ஒருங்கிணைப்பு குழுவினருடன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சத் தத் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை தாங்கினர். சேர்மன்கள் அமைச்சர் கந்தசாமி (பிரசார குழு), முன்னாள் காங்., தலைவர் ஏவி.சுப்பிரமணியன் (விளம்பர குழு), முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ., (ஊடக ஒருங்கிணைப்பு குழு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டங்களில் ஒவ்வொரு கமிட்டி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதலில் விளம்பர குழு, அதைத் தொடர்ந்து பிரசார குழு, 3வதாக ஊடக ஒருங்கிணைப்பு குழுவினருடன் சஞ்சய் தத் பாராளுமன்ற தேர்தல் பிரசார யுக்திகள் குறித்து விவாதித்தார். ஒவ்வொரு குழுவினரிடம் கருத்துக்களை கேட்டறிந்த அவர், மத்திய பாஜக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு, அதை மக்களிடம் எளிதாக சென்றடையும் வகையில் நவீன தொழில்நுட்பம் வாயிலாகவும், பிரசாரங்கள் மூலமாகவும் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags : Election Commission ,Sanjay Dutt ,
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!