தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி,  பிப். 21: புதுவை, தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்தவர்  கண்ணன் (52), தச்சு தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து  வாழ்ந்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், தன்னை  கவனிக்க யாரும்

இல்லையே என்ற மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது குளியலறையில் கயிற்றால்  தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: