அரசு ஒப்பந்த ஊழியர், மெக்கானிக் மீது வழக்கு

புதுச்சேரி,  பிப். 21: புதுவை ரெட்டியார்பாளையம் மோரிசான் தோட்டத்தைச் சேர்ந்தவர்  வள்ளி, அரசு ஒப்பந்த ஊழியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்  ராஜேந்திரன் (60). டூவீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இங்கு வண்டிகளை  கழுவும்போது கழிவுநீர் வள்ளி வீட்டு வாசல் வழியாக செல்வது தொடர்பாக  அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட  தகராறில் வள்ளிக்கு ஆதரவாக உறவினர்கள் விஜயகுமாரி, ஜீவானந்தம் ஆகியோர்  ராஜேந்திரனிடமும், அவரது மருமகள் தமிழ்செல்வியிடமும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டு இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்களாம். இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசில் இருதரப்பும் தனித்தனியாக முறையிட்டுள்ளனர்.

ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் வள்ளி, விஜயகுமாரி,  ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. வள்ளி தரப்பு  கொடுத்த புகார் அடிப்படையில் சரவணகுமார், கணபதி, கௌரி, ராஜேந்திரன்  உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்த போலீசார் இருதரப்பினரிடமும விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: