புதுச்சேரி, பிப். 21: 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடந்த 18ம்தேதி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். புதுவையில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் 2 நாட்களாக வேலை நிறுத்தம் கொண்ட நிலையில், அலுவலகம் மூடிக்கிடந்தன. 3ம் நாளாக நேற்றும் அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திரண்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் கிடைத்து அங்குவந்த பெரியகடை போலீசார் அனுமதியின்றி மறியல் செய்தால் கைது செய்வோம் என எச்சரித்தனர்.
இதையடுத்து சிறிதுநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.