பாகூர் அருகே வாகனம் மோதி மீனவர் பலி

பாகூர், பிப். 21:   புதுவை அடுத்த தமிழகப் பகுதியான தாழங்குடாவை சேர்ந்தவர் மீனவர் கண்ணன் (45). நேற்று முன்தினம் இரவு பனித்திட்டில் உள்ள மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாகூர் அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் பலத்த காயமடைந்து இறந்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: