தொழில் முதலீட்டாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரியில் தொழில் துவங்குவது தொடர்பாக இந்தோ, கனடா தொழில் வர்த்தக சபையினர் முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்கு புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பசுமை தொழிற்சாலைகள் துவங்குவது தொடர்பாக உள்நாடு, வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களுடன் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் கனடா நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள புதிய தொழில் கொள்கையின்படி, தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளையும் மாநில அரசு துரிதமாக செய்து கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் உடனிருந்தார்.

Related Stories: