×

செய்யாறு அருகே மாடு மிரண்டதால் வண்டியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

செய்யாறு, பிப்.21: செய்யாறு அருகே மாடு மிரண்டதால் மாட்டுவண்டி மீது அமர்ந்து சென்ற தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.  செய்யாறு தாலுகா ஹரிகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(55), விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அருகாவூர் அருகே செய்யாற்றுபடுகையில் மணல் அல்ல சென்றார்.

அருகாவூர் கிராமத்தில் வயல்வெளி வழியாக சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓடியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரவி படுகாயமடைந்தார். இதைப்பார்த்த உடன் வந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள், ரவியை மீட்டு செய்யாறு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ரவியின் மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : forest ,Kodar ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...