×

மாரியம்மன் கோயில் 12வது தெருவில் ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 12வது தெருவில் தரைப்பாலத்தில் காணப்படும் ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம்.

இதனால், குப்பைகள் மலைபோல் காணப்பட்டு துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுத்ெதால்லையும் அதிகமாக உள்ளது, அவ்வழியாக செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில், திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 12வது தெருவில் உள்ள தரைப்பாலத்தில் ராட்ச பள்ளம் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...