×

திருவண்ணாமலை அருகே இளம்பெண் மாயம்

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை அருகே இளம்பெண் திடீரென மாயமானார். அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி விடுமுறையில் ஊருக்கு இளம்பெண் வந்திருந்தார். இந்தநிலையில் கடந்த 10ம் தேதி முதல் வீட்டில் இருந்த இளம்பெண்ணை காணவில்லை. உறவினர் வீடு, அக்கம், பக்கம் எங்குதேடியும் அவர் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் நேற்றுமுன்தினம் தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...