தீக்குளித்த இளம்பெண் சாவு

சாத்தான்குளம், பிப். 20: சாத்தான்குளம் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

 சாத்தான்குளம்  அடுத்த பெரியதாழையைச் சேர்ந்தவர் ஜார்ஜ். மீன்பிடி தொழிலாளி. இவரது  மனைவி டொனில்டா (24). தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆனபோதும் குழந்தை இல்லை. பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவருக்கும் அடிக்கடி  வாய்த் தகராறு இருந்து வந்தது. இதே போல் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த  டொனில்டா, வீட்டில் யாருமில்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி   தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.  இதுதொடர்பாக தட்டார்மடம்  போலீசார்  வழக்குப் பதிந்த நிலையில் திருச்செந்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: