வாகைகுளம் கரையடி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

விளாத்திகுளம், பிப். 20: புதூர் அருகே வாகைக்குளம் கண்மாய் கரையில் உள்ள கரையடி அம்மன் கோயிலில்  உலக நன்மை வேண்டி பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

 விளாத்திகுளம் புதூர் அருகே வாகைக்குளம் கண்மாய் கரையில் கரையடி அம்மன், கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு மாசி மாத பவுர்ணமி தினமான நேற்று உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கரையடி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் மஞ்சட் பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, அரிசி மாவு, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. தக்கார் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்ேகற்று கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டு வழிபட்டனர்.

Related Stories: