தூத்துக்குடி, பிப். 20: தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (20, 21) திமுக மகளிர் அணி மாநில செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி., பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி இன்று (20ம் தேதி) மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குமாரப்பண்ணையூரில் அவரது எம்.பி. நிதியிலிருந்து ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் சமுதாயக்கூடம், மாலை 5 மணிக்கு அமலிநகரில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் சமுதாயக்கூடம், 5.30 மணிக்கு ஆலந்தலையில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும் மீன் வலைக்கூடம், ரூ.10 லட்சம் செலவில் கட்டப்படும் ரேஷன் கடை கட்டிடம், மாலை 5 மணிக்கு உடன்குடி ஒன்றியம் மணப்பாட்டில் ரூ.9 லட்சம் செலவில் உயர் கோபுரமின் விளக்கு அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு தண்டுபத்து கிராமத்தில் நடைபெறவுள்ள திருச்செந்தூர் தொகுதி வாக்குச்சாவடிமுகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.