பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் இந்திய மிஷனெரி சங்க விற்பனை

நாசரேத், பிப். 20: நாசரேத் அடுத்த பிரகாசபுரம்

தூய  திரித்துவ ஆலய வளாகத்தில் இந்திய மிஷனெரி சங்க ஊழிய ஆதரவு விற்பனை விழா நடந்தது.

 நாசரேத் ஐ.எம்.எஸ். மண்டல அபிவிருந்தி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டியான் தலைமை வகித்து ஜெபித்து திருவிழாவை துவக்கிவைத்தார். பாட்டக்கரை ஐ.எம்.எஸ். கவுரவ அபிவிருந்தி மிஷனெரி செல்வசிங், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ்  முன்னிலை வகித்தனர். இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டீபன், சேகர செயலர் ரஞ்சித் ராஜசிங், பொருளாளர்  ராபர்ட், சபை ஊழியர் கோயில்ராஜ், கனகராஜ்  மற்றும் சபையார் திரளானோர் பங்கேற்றனர்.

 முன்னதாக ஆலயத்தில் சேகர குரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது.

Related Stories: