சாத்தான்குளம் அருகே தம்பதியினர் தகராறில் இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்குப்பதிவு

சாத்தான்குளம், பிப். 20: சாத்தான்குளம்  அருகே தம்பதி தகராறில் இருத்தரப்பினர் மோதிக்கொண்டனர்.  இதுதொடர்பாக மனைவி உள்ளிட்ட 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.சாத்தான்குளம்  அருகேயுள்ள புதுகிணறு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் கரையடி மாணிக்கம் (38)  தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரகலாவும் (30) காதல் திருமணம் செய்துகொண்டனர். இது சந்திரகலாவின் சகோதரர் பூல்துரைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களிடையே முன்விரோதம் இருந்து  வந்தது.இதனிடையே சமீபத்தில்  பூல்துரை வீட்டில் நடந்த விழாவில்   சந்திரகலா பங்கேற்றதால் அவரை கணவர் தாக்கினார்.  இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால்  ஆத்திரம் அடைந்த பூல்துரை மற்றும் உறவினர்கள் சித்திரைசெல்வன், முருகன்,  பூல்பாண்டி, மணிகண்டன், உத்திரபாண்டி ஆகிய 6 பேரும் சேர்ந்து கரையடி மாணிக்கத்தை  தாக்கினர். இதில் காயமடைந்த மாணிக்கம் நெல்லை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.புகாரின்பேரில் பூல்துரை உள்ளிட்ட 6 பேர் மீது  சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குப் பதிந்தார். இதேபோல்  சந்திரகலா அளித்த புகாரின்பேரில் அவரது கணவர் கரையடிமாணிக்கம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: