தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி, பிப். 20: தூத்துக்குடி தாளமுத்துநகரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. அப்பல்லோ மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடந்த இம்முகாமில் பங்குத்தந்தை இருதயராஜ் ஜெபம் செய்தார். மகளிர் அணி மாநில துணை அமைப்பாளர் குமாரி விஜயகுமார், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.

 தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, முகாமை துவக்கி வைத்தார். இதில் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகி அருண், அப்பல்லோ பொதுமேலாளர் சாமுவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூபதி, கருணாகரன்,  மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பெல்சி,  ஊராட்சி செயலாளர் சரவணகுமார், இளங்கோ, ஒன்றியச் செயலாளர் மாட்சாமி,  மகளிர் அணி ஜெசி பொன்ராணி,  பகுதி செயலாளர் பொன்னரசு,  மகளிர் தொண்டர் அணி வேலம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜோதிராஜா, தொண்டர் அணி அமைப்பாளர்  சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலக்குழு ராஜேந்திரன், மீனவர் அணி புளோரன்ஸ்,  கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ராமசாமி, நிர்வாகிகள்  அரோக்கியமேரி, ஜோஸ்பின்மேரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முகாமில் அப்பல்லோ மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையளித்தனர்.

Related Stories: