தீக்குளித்த புதுப்பெண் சாவு

புதுக்கோட்டை, பிப். 20: புதுக்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகதேவி (19). இவருக்கும், அதே ஊர் மேலத்தெருவைச் சேர்ந்த சாமத்துரையின் மகனும் காஷ்மீரில் துணை ராணுவ வீரரும், ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவருமான சுடலை (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்துவேறுபாட்டால் தகராறு  ஏற்பட்டது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுடலை மனைவியிடம் தகராறு செய்த பிறகு மறுநாள் மாலை காஷ்மீர் சென்றார்.

  இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகதேவி சம்பவத்தன்று நள்ளிரவு தீக்குளித்தார். பின்னர்  உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஆறுமுகதேவியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப் பதிந்தார். தூத்துக்குடி சப்கலெக்டர் சிம்ரன்சிட்சிங் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: