தொழிலாளி மர்ம சாவு

நெல்லை, பிப்.20: நெல்லை சந்திப்பு நந்தவன தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் பாளை. அருகே மேலபுத்தனேரியை சேர்ந்த ஜான்சன் (44) என்பதும், மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததும் தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொைல செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: