நெல்லையில் நாளை கிறிஸ்தவ ஜெப மாநாடு

நெல்லை, பிப்.20: நெல்லையில் அனைத்து சபைகளும் இணைந்து நடத்தும் ஆசீர்வாதமான தேசம் ஜெபமாநாடு வரும் நாளை (21ம் தேதி) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பாளை காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் சிறப்பு ஆசீர்வாத தேவசெய்தி மற்றும் ஜெபம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் சிறப்பு தேவ செய்தியாளர்கள், கிறிஸ்துவின் சேனை தலைமை போதகர் ராஜன் எட்வர்ட், துதியின் கோட்டை தலைமை போதகர் ரத்தினம்பால், பீஸ் அசெம்பிளி ஆப் காட் சபை தலைமை போதகர் கிளாரன்ஸ் மருதையா, பரலோக அக்னி கூடாரம் தலைமை போதகர் ஜோசப்ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்கின்றனர். சபை மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு பரலோக அக்னி கூடாரம் தலைமைபோதகர் ஜோசப் ஜார்ஜ் தெரிவித்தார்.

Related Stories: