மேட்டுப்பாளையம் சந்திப்பில் தூக்கில் தொங்கிய ஆண்பிணம்

புதுச்சேரி,  பிப். 20: புதுவை, மேட்டுப்பாளையம் சந்திப்பில் டிராபிக் போலீஸ் பூத்  உள்ளது. இதன் பின்புறமுள்ள ஒரு கட்-அவுட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க  அடையாளம் தெரியாத ஆண் நபர் நேற்று முன்தினம் துண்டால் தூக்கில் தொங்கிய  நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த உறுவையாறு பகுதியைச் சேர்ந்த  இளநீர் வியாபாரி செல்வராஜ், மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணமாக தொங்கிய  அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிந்து  இறந்த நபரை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். இறந்த நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், பிரவுன் கலர்  கைலியும் அணிந்திருந்தார்.

Related Stories: