நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துணை கமிஷனர் பணியிடம் மாற்றம்

நெல்லை, பிப். 20:  நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகியோர் சென்னைக்கு பணியிடம் மாற்றப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று போலீஸ் கமிஷனர்கள், டிஐஜிக்கள், துணை கமிஷனர்கள், எஸ்பிக்கள் என உயரதிகாரிகள் 11 பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தமிழக போலீஸ் அகாடமி ஐஜி பாஸ்கரன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகவும், அங்கிருந்த மகேந்திரகுமார் ரத்தோட் தமிழக போலீஸ் அகாடமி டிஐஜியாகவும், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், சென்னையில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு (ஓசியூ) ராஜன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் மாற்றப்பட்டனர்.

Related Stories: