நெல்லை, பிப். 20: மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் ராஜ்(23). இவர், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இவர் கருங்குளம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி பைக்கையும் சேதப்படுத்தியது. பின்னர் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. காயமடைந்த ராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக அவரை கும்பல் தாக்கியதாக தெரிகிறது.