×

தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்கு

திருச்சி, பிப்.20:  ரங்கம் காவல் நிலையம் எதிரே ராகவேந்திரா ஆர்ச் உள்ளது. இந்த ஆர்ச் அருகில் நேற்று இரவு 3 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் ஏட்டு ஜான் மீரான் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
 அப்போது ஏட்டுவிற்கும், 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 3 பேரில் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு கையில் கிழித்தான். இதில் ஏட்டுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.  அவர் கூச்சல் போட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 3 பேரும் போதையில் இருந்ததையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ