×

22ம் தேதி நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, பிப்.20:  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 22ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளன.
குறைந்தபட்சம் 35 வயதிற்குள் 8, 10, 12, ஐடிஐ முடித்த உடல் மற்றும் செவித்திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளிகளும், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பட்டம், எம்பிஏ, பிஇ, பிடெக் படித்தவர்கள் (18க்கு மேல் 35 வயதுக்குள்) கலந்துகொள்ளலாம்.
இந்தநேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ