திருப்பூர், பிப்.20: திருப்பூரில், கடந்த 10ம் தேதி பிரதமர் வருகையின் போது, பனியன் தொழிலாளியை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவினாசியை அடுத்த பெரியாயிபாளையம் கனகராஜ் (39) என்பவர் கூறியதாவது: நான் இதேபகுதியில், தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி நாகமணி (35). எங்களுக்கு இரு குழந்தைகள். மூத்த மகள் பிளஸ் 1 படித்து வருகிறார். மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெருமாநல்லூர் அருகே பிரதமர் மோடி வந்திருந்தார்.