அவிநாசி,பிப்.20: அவிநாசி அருகே பழங்கரை பச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்மக்ரான் (70). இவர் பெரியாயிபாளையத்திலிருந்து நரிக்குறவர் காலனி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியே வேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மக்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல அவிநாசி அருகே பெருமாநல்லூர்வள்ளிபுரம் பசுமை நகரை சேர்ந்தவர் நடராஜ் (56). இவர் பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் பசுமை நகர் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.